சென்னை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த  சம்பவத்தில், சாத்தான்குளம் சம்பவத்தில் சேவா பாரதி’ இளைஞர்கள் (Friends of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும்  என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினருடன் இணைந்து ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களும், அவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையில்,  சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இருவர் பேசும்  ஆடியோ ஒன்றும் சமூக வளைதளங் களில் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவலர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்திய  சேவா பாரதி’ இளைஞர்கள் ( Friends of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அவர்து டிவிட்டில், அவர்களை (ஜெயராஜ், பென்னிக்ஸ்)  தாக்கியதாக சொல்லப்படும் சேவாபாரதி இளைஞர்கள்  (Friends of Police),  ரிமான்ட் செய்த மாஜிஸ்திரேட்,  சான்றழித்த மருத்துவர்,  சிறை அதிகாரி..   அவர்களையும் விசாரித்து வழக்கில் சேர்க்க வேண்டும், முன்னாள் எஸ்பி. மாற்றப்பட்ட அதிகாரி குமார் , பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.