திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில்  உள்ள கோவிலுக்குள்  அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

நேற்று இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் எனவும் 1931-ல் லண்டன் கவுன்சில் கூறிய தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்த கோரியும்  போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலை யால், 3 மற்றும் 4-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவினை ஆட்சியர்ர் சங்கீதா பிறப்பித்தார். மேலும் இந்து முன்னணியினர் நடத்தும் இந்த போராட்டத்திற்கு, மாநகர காவல்துறையும் அனுமதி மறுத்தது.

ஆட்சியரின் 144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதால் காவல்துறைக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆயினும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.

நேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா,ஜனதா, அதாவது இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்