சென்னை:  சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் இன்று காலை கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அந்த காரில் பயணம் செய்த மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

இன்று காலை சென்னை  தியாகராயநகர் ஜிஎன்செட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி,  தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பின்னால் வந்த வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த வாகன ஓட்டிகள், காருக்கில் சிக்கியிருந்த மாணவியை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயங்களுடன் இருந்த கல்லூரி மாணவியை மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவி அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்துகாரணமாக,  கார் கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய  ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மாணவி, கோடம்பாக்கத்தில் இருந்து தியாகராயர் வழியாக கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது தெரிய வந்தது.