புதுடெல்லி:
பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு கொரோனா தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி துவக்கம் முதலே விமர்சித்து வருகிறார். அவ்வப்போது தனது டுவிட்டர் மூலம் தனது விமர்சனங்களை முன் வைத்து வரும் ராகுல் காந்தி, இன்று பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,

கொரோனாவுக்கு எதிராக போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது” என்று பதிவிட்டுள்ளார்.