சென்னை

நேரு விளையாட்டு அரங்கில் செந்தில் பாலாஜியின் அறுவைசிகிச்சையை நடத்த முடியுமா என அமைச்சர் சுப்ரமணியன் வினா எழுப்பி உள்ளார்.

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்

அப்போது அவர்,

”இன்று தமிழ்நாட்டில் 103 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர்,எக்கோ, இசிஜி,மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் , காசநோய் உள்ளிட்ட நோய் தொடர்பான பரிசோதனைகள் இலவசமாக செய் யப்படுகிறது.  தவிர பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

 எதிர்க்கட்சிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மையில்லை என்று குற்றம் சாட்டுகின்றன.  இந்த இருதய அறுவை சிகிச்சையை 15 ஆயிரம் பேர் முன்னிலையில் நேரு விளையாட்டரங்கத்தில் வைத்துச் செய்ய முடியுமா

 என வினா எழுப்பி உள்ளார்.