கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் இன்னலை சந்திக்க நேரிடுகிறது.

எந்த மருத்துவமனையில் இடம் இருக்கிறது உள்ளிட்ட குறைந்த பட்ச தகவல் கூட கிடைக்காமல் அள்ளாடுவோருக்கு உங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் ஒரு பத்துபேருக்கு உங்களால் உதவ முடியும் என்று நினைக்கும் தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் இரண்டு வாரங்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலமாக கணினியில் ‘எஸ்செல் ஷீட்’ பயன்படுத்தி இந்த உதவியை செய்யமுடியும், ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

தன்னார்வலர்களாக இணைத்துக்கொள்ளும் இணைப்பு

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScDBt79O_3R9fuAsKipJN7rjuRHLRFAbQ7blHnYuX0SB2jwxQ/viewform