லிஃபோர்னியா

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த விசா நடைமுறைகளை கலிஃபோர்னியா நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கிப் பணி புரிய இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்கி வருகிறது.  இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. எச் 1 பி விசா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற வகையில் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. வெளிநாட்டினர் பணியாற்ற இந்த விசாவைத்தான் அமெரிக்க நிறுவனங்கள் நம்பியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.  இதைத் தவிர அந்த நாட்டில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினர் 20 ஆயிரம் பேருக்கும் இந்த விசா தரப்படுகிறது.  அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்கப் பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்று முழங்கினார்.

தவிர ஊதியத்தின் அடிப்படையில்தான் எச்-1பி விசா என புதிய விதியைக் கொண்டு வந்தார். இதன்படி அதிக சம்பளம் வாங்குவோருக்குத்தான் அமெரிக்க விசா வழங்கப்படும் என்பதால், இது வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் தடைக்கல்லாக அமைந்தது.

இதை எதிர்த்து கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரே ஒயிட், டிரம்ப் கொண்டு வந்த மாற்றத்தை ரத்துசெய்து அதிரடியாகத் தீர்ப்பு அளித்துள்ளார்.   இது பல அமெரிக்காவில் வசிக்கும் பல வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.