சென்னை:
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 11 ந்தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது.