சென்னை

மீண்டும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும், ஆந்திராவுக்குப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லவும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்து வரவும் தடை விதிக்கப்பட்டது.  எனவே ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  இதையொடிட் தமிழக அரசு இன்று முதல் மேலும் தளர்வுகளை அறிவித்துள்ளது.

அவ்வகையில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குப் பேருந்து சேவைக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகளும் தமிழகத்துக்கு பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளன.  அதையொட்டி இம்மாநிலங்களுக்கு இடையே மீண்டும்  பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.