Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… செங்கோட்டையன் டிவிட்…

May 13, 2020

சென்னை:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்திற்கு வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பின் கடைசி தேர்வு போன்றை ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகளின் வசதிக்காகவும், அவர்களை தேர்வுக்கு அழைத்து வரவும்,  தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்,, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும், 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜுன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மே 17ந்தேதிக்கு பிறகு 50 சதவிகித பேருந்துகளே இயங்கும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டிவிட் போட்டுள்ளார். அதில்,
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு  கூறியுள்ளார்.

Post navigation

ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது….
சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம் கொரோனா சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம்…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer