க்னோ

குஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தனது மருமகனுக்கும் சகோதரனுக்கும் முக்கிய கட்சி பதவிகளை அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி வாரிசு அரசியலை எதிர்த்து வருபவர் ஆவார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அவர் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்திரப்பிரதேசத்தில் போட்டி இட்டார்.  ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்தது.   அதை ஒட்டி மாயாவதி சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

இந்த தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் சென்ற முறையை விட குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.   இதன் மூலம் மக்கள் சாதி அரசியலையும் வாரிசு அரசியலையும், விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சியில் துணைத் தலைவரால அறிவிக்கப்பட்ட போது அவர் மக்களவை, சட்டப்பேரவை போன்றவற்றில் உறுப்பினராகவோ அமைச்சர் அல்லது முதல் அமைச்சராக நியமிக்கப்பட மாட்டார் என மாயவதி அறிவித்திருந்தார்.

ஆனால் கட்சிக்குள் வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் எழுந்ததால் மாயாவதி அவரை பதவியில் இருந்து நீக்கினார்.   ஆயினும் ஆனந்த் குமார் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பணி ஆற்றினார்.  அத்துடன் அவர் மகனும் மாயாவதியின் மருமகனுமான ஆகாஷ் ஆனந்த் பல பிரசாரக் கூட்டத்தில் தனது அத்தை மாயாவதியுடன் காணப்பட்டார்.

நேற்று லக்னோவில் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் ஆனந்த் குமாரை மீண்டும் கட்சியின் துணைத் தலைவராக மாயாவதி நியமித்துள்ளார்.  அத்துடன் அவருடைய மகனும் மாயாவதியின் மருமகனுமான ஆகாஷ் ஆனந்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.   அவருடன் மற்றொரு தேசிய ஒருங்கிணைப்பாளராக அம்ரோகா மக்களவை உறுப்பினர் தானிஷ் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.