லக்னோ:

த்தரபிரதேசத்தில் போட்டியிடும் பிஎஸ்பி, 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு எதிராக,  சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ்- ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன.

சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 37 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்தளம் 6 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தனது கட்சி சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பகுஜன் சமாஜ்  வெளியிட்டது.

காசிப்பூர் தொகுதியில் சிறைக்கு சென்றுள்ள முக்தர் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரிக்கு, கட்சியின் தலைவர் மாயாவதி வாய்ப்பு வழங்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\