சென்னை:
கஸ்ட் 15 முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பி.எஸ்.என்.எல். போனில் உள் நாட்டு அழைப்புகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
BSNL Dynamic Lock facility
இது குறித்து பி.எஸ்.என். எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம், லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும்  ஒரு சலுகையை பி.எஸ்.என்.எல். அளிக்கிறது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 (நாளை) முதல்,  ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.
மேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும்” என்று  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், “நெட் கனெக்ஷன் பெறுவோர் மட்டுமே லேண்ட் லைன் போனை விரும்புகிறார்கள். ஆகவே செல்போன் அழைப்புகளுக்கு சலுகைகள் வழங்கினால் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்” என்று வாடிக்கையாளர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.