சிகாகோ

ந்திய மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் 

இந்திய  மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது  அமெரிக்காவில் ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற இந்திய மாணவர் ஓகியோவின் சின்சினாட்டி நகரில் மர்மமான முறையில் கடந்த வாரம், இறந்து கிடந்தார். இதுவரை அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

நேற்று மற்றொரு துயரமான சம்பவமாக ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டார். இதையொட்டி, சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.  சமூக ஊடகங்களில் வெளியான காணொளி காட்சிகளில், இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, தாக்கப்படுவதும், அதிக அளவில் ரத்தம் கொட்டியதையும் அதில் காண முடிந்தது.

தவிர சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றொரு வீடியோ, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளாகத் தோன்றுகிறது, சிகாகோ தெருக்களில் அலி மூன்று தாக்குதல்காரர்களால் துரத்தப்படுவதைக் காட்டுகிறது. இந்திய மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.