ண்டன்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வரும் ஜூலை 4 ஆம் தேதி அன்று பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் , பிரதமர் சுனக் இந்த தேர்தல் 2024 பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். ல் பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். அப்போதே தேர்தல் குறித்துதான் என்று ஊடகங்களில் செய்திகள் கசிய ஆரம்பித்தது.

நேற்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கான பயணத்தை பிரதமர் திடீரென ஒத்திவைத்தார்.  எனவே பிரிட்டனில் உள்ள பிபிசி, ஐடிவி, ஸ்கை நியூஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள், அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையில் சுனக் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியிருந்தன.

ஊடகங்கள் எதிர்பார்த்தபடியே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது 44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.