பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில், 2 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலியா 70 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது ஆஸ்திரேலிய அணி. அதன்படி, டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிஸும் களமிறங்கினர். ஆனால், வார்னர் 1 ரன்னிலேயே சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார்.

பின்னர், புதிதாக களமிறங்கிய மார்கஸ், ஷர்துல் பந்துவீச்சில் 5 ரன்களுக்கு அவுட்டானார். தற்போது, லபுஷேனும், ஸ்டீவ் ஸ்மித்தும் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 90 பந்துகளை சந்தித்துள்ள லபுஷேன் 25 ரன்களை அடித்துள்ளார். ஸ்மித் 59 பந்துகளை சந்தித்து 31 ரன்களை எடுத்துள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில், முதன்முதலாக, இரண்டாவது செஷனிலேயே மொத்தம் 5 பவுலர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.