சென்னை

யில்களில் ஏ சி பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்தது.   அதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள், கம்பளிகள், தலையணைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.   மேலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் பயணம் செய்யும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  இதையொட்டி இடையில் நிறுத்தப்பட விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கப்படுகின்றன.  மேலும் முன்பதிவில்லா பெட்டிகளும் படிப்படியாக இணைக்கப்படுகின்றன.  மேலும் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் மத்திய ரயில்வே வாரியம்,

”கொரோனா விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்ததால், ரயில்களில் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் ரயில்களுக்குள்ளே சணல், கம்பளிப் போர்வைகள் மற்றும் திரைத் துணிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது இந்த கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆகவே உடனடியாக இது அமலுக்கு வருகிறது. முன்பு போல பயணிகளுக்குக் கம்பளி, போர்வை  ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது’’

எனத் தெரிவித்துள்ளது.