விருதுநகர்: டிராக்டர் டிரைலரை திருடிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த டிராக்டரின் டிரைலர் திருடு போனது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்ணன், கருப்பசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பதும், கண்ணன், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்ற வருகிறது.