ந்த் கபீர் நகர், உத்திரப் பிரதேசம்

னது பெயரை போடாததால் ஆத்திரம் அடைந்த உத்திரப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை காலணியால் தாக்கி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் சந்த் கபிர் நகர் தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினர் சரத் திரிபாதி. இவர் சமீபத்தில் தனது தொகுதியில் நடந்த ஒரு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். அந்த விழாவில் திறந்து வைக்கப்பட்ட பெயர் பலகையில் சரத் திரிபாதியின் பெயர் இடம் பெறாததால் அவர் மிகவும் கோபம் அடைந்துளார்.

அதை ஒட்டி அவர் அந்த பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான ராகேஷ் பகல் உடன் தகராறு செய்துள்ளார். ராகேஷ் பகலும் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். இருவருக்கும் இடையில் தகராறு முற்றி உள்ளது. மிகவும் ஆத்திரம் அடைந்த பாஜக மக்களவை உறுப்பினர் சரத் திரிபாதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராகேஷ் பகல் மீது ஆத்திரத்துடன் பாய்ந்துள்ளார்.

சரத் திரிபாதி தனது காலணியை கழற்றி ராகேஷ் பகலை சரமாரியாக தாக்கி உள்ளார். இது அந்த இடத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கியது. பதிலுக்கு ராகேஷ் பகலும் தாக்குதல் நடத்தி உள்ளார். இருவரையும் அங்கிருந்த காவலர் ஒருவர் இடையில் புகுந்தி விலக்கி உள்ளார்.

இந்த நிகழ்வு வீடியோ படமாக்கப்பட்டுள்ளது, அந்த வீடியோ பலராலும் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

[youtube https://www.youtube.com/watch?v=AAd1BroG88g?feature=youtu]