சிங்குர்லி, மத்தியப்பிரதேசம்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகன் தன்னுடன் வாக்குவாதம் செய்தவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த ராம்லால் என்பவர் மத்தியப்பிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். ஆவார். ராம்லாலின் மகன் விவேகானந்தன் கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் ஒரு தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் விவேகானந்தன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை சுட்டார்.  துப்பாக்கிச்சூட்டில் சூரியகுமார் என்பவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்த சூரியகுமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  .காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு வனத்துறை காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் விவேகானந்தன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.