சென்னை

சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் கடந்த ஆக. 1-ம் தேதி நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கலந்து கொண்டார்.

அப்போது இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி கபிலன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையொட்டி அளிக்கப்ப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் காவல்துறையினர் இன்று (ஆக. 4) காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டில் அவரை கைது செய்தனர்.

கபிலன் கைது சம்பவத்தையறிந்த பாஜகவினர் அப்பகுதியில் கூடியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது., கபிலன் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]