டெல்லி :  தங்களை பாஜகவில் சேரும் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இல்லையேல், மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டம்  தீட்டி உள்ளதாகவும் டெல்லி மாநில அரசின் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  தற்போது கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர், சிறையில் இருந்து அரசு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கபடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளார். ஆனால், கெஜ்ரிவால், நீதிமன்ற காவலில் இருந்தாலும், முதல்வராகத் தொடர்ந்து வருகிறார்.  கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக டெல்லி அமைச்சர் அதிஷி கூறி வருகிறார்.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த  ஆத்ஆத்மி இமைச்சர் அதிஷி, மத்திய பாஜக அரசு மற்றும் அமலாக்கத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.   தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம்  தீட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

ஆனால், யார் கைது செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறியவர், எங்களது வீடுகளில் விரைவில் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடக்கும், பின்னர் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்படுவோம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றார். ஏற்கனவே கெஜ்ரிவால் உள்பட சில கைது செய்துள்ள அமலாக்த்ததுறை தற்போது,  அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைத்து செயலாற்றி வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர், “எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எனது நெருங்கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணுகியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என்றவர்,  நீதிமன்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை சவுரப் பரத்வாஜ் மற்றும் எனது பெயரை (அதிஷி)  தெரிவித்தது என்றவர், டெல்லி மதுபான கொள்கை  வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யிடம் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இதனை சொல்கிறேன். இது தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையிலும், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையிலும் உள்ளது என்றார்.

இதனை தற்போது  கூறுவதற்கு காரணம் என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதால், கட்சியை உடைக்கும் நோக்கில், பாஜக இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றவர், அதன் காரணமாக, ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைமை நிர்வாகிகளை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது என்றார்.