பீகார்:
பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், நோயாளிகளும், மருத்துவர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் இங்குச் சாதாரணமாக மழை பெய்தாலே மருத்துவமனை முழுவதும் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்கிறார்கள் நோயாளிகள்.

அதுமட்டுமில்லாமல், தொடர் மழைபெய்தால் மருத்துவமனையின் கீழ் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும் என நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனையின் அருகே கழிவுகள், கொட்டப்படுவதால், பன்றிகளின் கூட்டம் கூட்டமாக வந்து மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றன.