பீகார்:
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் உராய்வு மற்றும் அழுத்தம் ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சரண் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் குமார் தெரிவிக்கையில், சாப்ராவில் ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.