பாட்னா:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனது கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தினார், மேலும் தன்னை தனிமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா நோய்த் தொற்றுக்கான சோதனைகளைச் செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.