பாட்னா: பீகார் மாநில சுகாதாத்துறை கூடுதல் செயலாளர் விசங்கர் சவுத்ரி, தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இது மாநில சுகாதாரத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதைத்தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மாநில அரசுகளின் சுகாதாரத்துறையினர் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். இதனால் எராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மருத்துவர்கள் உள்பட சுகாதாரத்பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவிசங்கர் சவுத்ரி , கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார்.