மூன்றாவது சீஸனுக்குத் தயாராகி விட்டது ‘பிக் பாஸ்’ டீம். இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கமலை வைத்து போட்டோஷூட், ப்ரமோ வீடியோக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், இதில் கலந்துக்கொள்ளவிருக்கும் மூன்று பிரபலங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

சின்னத்திரை சீரியலில்களில் நடித்து வந்த நடிகை ஆல்யா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தில் கலந்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.