பாட்னா

பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி செய்கார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல்களில் பீகார் மாநிலத்தில் ககாரியா தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர். ஆனவர் மெகபூப் அலி கெய்சர். இவர் பீகாரில் பா.ஜனதா கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி. ஆவார்.

லோக் ஜனசக்தி கட்சி பிளவடைந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் பக்கம் மெகபூப் அலி கெய்சர் சாய்ந்தார். ஆகவே தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் அவருக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.

அதிருப்தியில் இருந்த மெகபூப் அலி கெய்சர், நேற்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கட்சியின் நிறுவனர் லாலுபிரசாத் யாதவை சந்தித்தார். இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் ராஷ்டிரீய ஜனதாதளம் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பதால் அங்கு கெய்சருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.