சென்னை: பாரதியார் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்றும், தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று முண்டாசு கவிஞரின்  140 வது பிறந்த நாள். இதையொட்டி சென்னையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில்,மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று, தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில், 

“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,

திறம்பாட வந்த மறவன்,

அறம்பாட வந்த அறிஞன்,

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாள் இன்று.

தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்” என்று தெரிவித்துள்ளார்.