டில்லி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி சி சி ஐ பரிசுகள வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  மேலும் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வாங்கி உள்ளனர்.   இவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கட் சங்கம் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா டிவிட்டைல் ஒரு அரிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பில் அவர், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற அனைவருக்கும் பிசிசிஐ ரொக்கப் பரிசுகள் வழங்க உள்ளது.

அதன்படி தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசி ஐ ரூ.1 கோடி பரிசு அளிக்க உள்ளது.  மேலும் வெள்ளி ப் பதக்கம் வென்ற ரவிகுமார் தாகியா மற்றும் மீராபாய் ஜானுவுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும் வெண்கலப் பதக்கக்கள் வென்ற சிந்து, பஜ்ரங் பூனியா, லவ்லினா ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க உள்ளோம்.  அத்துடன் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ,1.25 கோடி பரிசு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.