மும்பை:
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி, வெள்ளி வென்ற மீராபாய் சானு மற்றும் ரவி குமார் தாஹியா ஆகியோருக்கு ரூ. 50 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சித்து, லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் மற்றும் ஹாக்கி அணிக்கு ரூ. 1.25 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.