மும்பை

ந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.

ஊக்க மருந்து உபயோகித்ததாக எழுந்த புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் சோதனைக்கு உட்படுத்தப் பட்டார்.   அப்போது அவர் உடலில் டெர்புடலின் என்னும் வேதிப் பொருள் உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது.   இந்த வேதிப் பொருள் இருமல் மருந்தில் கலக்கப்படுவதாகும்.

யூசுஃப் பதானுக்கு இந்த டெர்புடலின் என்னும் வேதி பொருள் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருப்பதாக கண்டறியபட்டுள்ளது.   அதனால்  அவருக்கு 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற பிசிசிஐ தடை விதித்துள்ளது.