டில்லி

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்தியாவில் இன்னொரு முறை திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர்.

சமீபத்தில்  கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டார்.    இந்த திருமணத்தில் இருவருடைய பெற்றோரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொண்டனர்.    அதன் பிறகு இந்தியாவில் இரு இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.   அதில் நரேந்திர மோடி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

தற்போது அவர்கள் வெளிநாட்டில் திருமணம் செய்துக் கொண்டது இந்திய சட்டப்படி அல்ல என தெரிவிக்கப் பட்டுள்ளது.   எனவே அவர்களால் தங்கள் திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்ய முடியவில்லை.   அதனால் அவர்கள் இருவரும் இந்தியாவில் இன்னொரு முறை திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கணவர் கோலியுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுஷ்கா சென்றிருந்தார்.  தற்போது அவர் இந்தியா திரும்பி உள்ளார்.  ஷாருக் கான் மற்றும் காத்ரினா கைஃப் ஆகியோருடன் ஜீரோ என்னும் திரைப்பட படப்பிடிப்பில் உள்ளார்.    அவர் இது குறித்து ஏதும் சொல்ல மறுத்து விட்டார்.