பஞ்சாபில் காலிஸ்தானி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக நடந்து வரும் காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியில், பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இது குறித்து பிபிசி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், சமூக ஊடக பயனர்கள் இதுகுறித்து ட்விட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

“பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தவறான தகவல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காக பிபிசி நியூஸ் பஞ்சாபி ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது” என்று சில பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

தப்பியோடிய காலிஸ்தானி தீவிரவாதி அம்ரித்பால் சிங், உதவியாளர் பப்பல்பிரீத் சிங்குடன் எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தின் நேரம் மற்றும் அதன் நம்பகத்தன்மையை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.