சென்னை: குறைவான வாடிக்கையாளர்களே வருவதால், ஊரடங்கு காலமான மே 3ம் தேதி வரை, தமிழகத்திலுள்ள வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வங்கிகளுக்கு வந்ததன் காரணமாக மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்பட்டு வந்தன.

தற்போது மே மாதம் 3ம் தேதிவரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் வருகை மேலும் குறையும் என்று கணிக்கப்படுகிறது. பிற்பகல் 1 மணிக்கே பெரும்பாலானோர் தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.