சென்னை

ந்த மாத இறுதியில் 5 நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

இந்த மாதம் 29ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 30ஆம் தேதி புனித வெள்ளி, 31ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவு, ஏப்ரல் 1 ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2 வருடாந்திர கணக்கு முடிவு  என ஐந்து நாட்களாக தொடர்ந்து வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விடுமுறை வருவதினால் ஏடிஎம் மையங்களிலும் பணம் நிரப்பப்படுமா என்பது சந்தேகம் என்பதால் மக்கள் தேவையான பணத்தை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு பலரும் கூறி வருகின்றனர்.