சென்னை: அதிமுகவில் இருந்து கழக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  புகழேந்தி ( கழக செய்தி தொடர்பாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளனர்.

தீவிர சசிகலா ஆதரவாளரான புகழேந்தி, சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர்.  தொடர்ந்து டிடிவி தினரகன் கட்சியில் சேர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எதிராக பேசிவந்தார். பின்னர் டிடிவியுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார்.