பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் நடத்தப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ‘பாலன் டி ஆர்’ என்ற பெயரில் தங்கப்பந்து விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த 2020ம் ஆண்டிற்கான விருது ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை அதிகபட்சம் 6 முறை வென்றவராக உள்ளார் அர்ஜெண்டினா அணியின் மெஸ்ஸி. இவர், 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அந்த கவுரவத்தைப் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் மொத்தம் 5 முறை வென்றுள்ளார் இவ்விருதை.
கடந்த மார்ச் முதற்கொண்டே, பல கால்பந்து போட்டிகள் முடங்கியது மற்றும் ரசிகர்கள் இல்லாமல் தற்போதைய போட்டிகள் நடப்பது உள்ளிட்ட காரணங்களால், இந்தாண்டிற்கான விருதை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.