டில்லி:

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாம் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

இந்திய துறவிகளின் தலைமை பீடமான அகில இந்திய அகாரா பரிஷத் பிரதிநிதிகள் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்தது. கூட்ட முடிவில் இந்தியாவில் உள்ள முக்கிய போலி சாமியார்கள் 14 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப் பட்டது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் டுவிட்டரில் கூறுகையில், ‘‘ போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. போலி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.