12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். டிசம்பர் 31-ந் தேதி தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தனர் ரசிகர்கள்.

அதற்கு செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் புத்தாண்டு தினமான நேற்று ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதை உறுதி செய்து செல்வராகவன் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டரை வேறொரு mathieu lauffray என்ற ஆங்கில புத்தகத்தின் போஸ்டரோடு ஒப்பிட்டு மீம் கிரியேட்டர்ஸ்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த இரண்டு புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.