தேனி முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 12.5 கிலோ மீட்டர் தூரத்தை 54 நிமிடங்களில் கடந்து கர்னல் ஒருவர் வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. 352 இளைஞர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த  கர்னல் வீரமணி கலந்துகொண்டார். சுமார் 12.5 கி.மீட்டர் தூரத்தை வெறும் 54 நிமிடத்தில் கடந்த அவர், இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியில் சேர்ந்து, கார்கில் போரில் பங்கேற்றத்தாகவும்,  மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனையை முதலில் நாம் கடைபிடித்து வாழவேண்டும் என்ற அடிப்படை  தத்துவத்தின்படி இளைஞர்களுடன் ஓடியதாகவும் தெரிவித்தார்.