jaya_
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று மதியம் 12.45 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அதே நேரத்தில், 226 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வரும் 28-ந் தேதி (வியாழக்கிழமை) தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.