கேப்டவுன்:
களிர் உலகக்கோப்பை டி-20 இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டம் கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.