உத்தரகாண்ட்: 
த்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்திலிருந்து சிறிய ரக பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. தியுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகள மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.