சென்ன‍ை: எதிர்வரும் சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்திலுள்ள 2 தொகுதிகளில் போட்டியிட, கமலஹாசன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் ஆகியவைதான் அந்த தொகுதிகள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு துவக்க விழா, பிப்ரவரி 21ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம்., கூட்டணி கட்சிகள் குறித்து உறுதி செய்யப்படும் என்பதாக தகவல்கள் கூறுகின்றன. அன்று, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களும் பெறப்படுகின்றன. ஆன்லைனிலும் மனுக்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கமல் கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகமாக இருந்தது. அது, தற்போது பல மடங்கு அதிகரித்திருக்கும் என்று அவர் நம்புகிறார். எனவே, தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகரிலோ அல்லது மைலாப்பூரிலோ அல்லது இரண்டிலுமோ போட்டியிட கமல் விருப்பப்படுகிறார் என்பதே செய்தி.