குவஹாத்தி: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், வாக்காளர் பட்டியலில் யாரின் பெயர்களெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ, அவர்கள் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

என்ஆர்சி பட்டியல் பின்பற்றப்படாது என்றும், அப்பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், ஒருவர் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில், மொத்தம் 33 மில்லியன் விண்ணப்பதாரர்களில், 1.9 மில்லியன் நபர்களின் பெயர்கள், புதுப்பிக்கப்பட்ட என்ஆர்சி பட்டியலில் இடம்பெறவில்லை. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியிட்ட நிலவரம் இது. இதனையடுத்து, பெயர்கள் விடுபட்டோர், வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீர்ப்பாயம் இறுதி முடிவெடுக்கும்வரை, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் இடம்பெற்றவர்கள், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.