டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 1.5 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியாவுக்கு வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. 7027 பேர் குணமடைந்தும், 22,010 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்.

ஆகையால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892ல் இருந்து 29,974 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பரவலால் பொதுமக்களும், நிறுவனங்களும் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 1.5 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். ஏழைகளுக்கு உதவ, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக  ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.