புவனேஸ்வர்:

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தங்கம் பெற்றார்.

இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக ஒடியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து இப்பிரிவில் 2ம் இடம் பிடித்த இலங்கை வீராங்கனை நிமலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.