6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் துவங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஒரு குழுவாகவும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மற்றொரு குழுவாகவும் விளையாட உள்ளன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற உள்ள இந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முக்கிய ஆட்டம் இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2 ம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாட உள்ளது.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் செப்டம்பர் 17 ம் தேதி கொழும்பு மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.