புதுடெல்லி:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலை கடத்தப் போவதாக வந்த மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இது குறித்து டெல்லி போலீஸ் தரப்பில் கூறும்போது, “புதுடெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்களுக்கு முன்பு ஒரு மெயில் வந்தது.

அதில், “உங்கள் மகளை கடத்தப் போகிறோம், முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மெயிலை டெல்லி சைபர் கிரைம் போலீஸாருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, அவரது மகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஹர்ஷிதா கெஜ்ரிவால் என்ற மகளும், புல்கிட் கெஜ்ரிவால் என்ற மகனும் உள்ளனர். ஹர்ஷிதா டெல்லி ஐஐடியில் படித்து வருகிறார்.

பஞ்சாபில் நடந்த தேர்தலின் போது, தன் தந்தையுடன் சேர்ந்து ஹர்ஷிதா பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.